#Coolie | 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – அமீர் கான்?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேட்டையனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. ரஜினியின் 171வது படமான இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேட்டையனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. ரஜினியின் 171வது படமான இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ரஜினி ஓய்வெடுத்து வருகிறார். இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கிடையே இப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இத்தகவல் உண்மை என்றும், சிறப்புத் தோற்றத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் அமீர் கான் நடிக்கவுள்ளதாகவும், இக்கதாபாத்திரத்தை எல்சியூ சினிமாவுக்கள் கொண்டுவர லோகேஷ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

1995ல் ஆடங்க் ஹாய் ஆடங்க் (Aatank Hi Aatank) என்ற படத்தில் அமீர் கான் மற்றும் ரஜினி ஒன்றாக நடித்து இருந்தனர். கூலி படத்தில் அமீர் கான் நடிக்க ஒப்புக்கொண்டால், அவர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிப்பது உறுதியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.