#Naniodela2 : ‘தசரா’ இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்க்கும் நானி!

தெலுங்கு நடிகர் நானியின் 33வது படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை தசரா திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கவுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும்…

தெலுங்கு நடிகர் நானியின் 33வது படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை தசரா திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கவுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் நானியில் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘சரிபோதா சனிவாரம்’. இப்படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் நானியைவிட எஸ்.ஜே. சூர்யாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கோர்ட், ஹிட் 3 ஆகிய படங்களில் நானி ஒப்பந்தமானார். தொடர்ந்து ஹிட் 3 படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நானியின் 33வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தை தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக நானிஒடேலா-2 என பெயரிடப்பட்டுள்ளது. பூஜையில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.