பைக் டாக்ஸியில் அலுவலகத்திற்கு செல்லும் போது, மடிக்கணினியில் வேலை பார்த்து கொண்டே பெண் ஒருவர் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் வேலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய சூழ்நிலையில் எப்போதும் இருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் விடுமுறையில் இருக்கும் போது, பெருநகரங்களில் வாகனங்களில் வேலைக்கு செல்லும் போது அல்லது வீடு திரும்பும் போது மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மையில், பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்கூட்டரில் பின் அமர்ந்து கொண்டு மடிக்கணினியில் வேலை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த பதிவு பெரு நகரங்களின் சாதாரணமான போக்குவரத்து நெரிசலை காட்டினாலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் கடினமான சூழ்நிலையை உணர்த்துவதாக ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த பதிவை முதலில் வெளியிட்ட நபர் “உச்சகட்ட போக்குவரத்து நெரிசல், பணிபுரியும் பெண் ஒருவர், ரேபிடோ வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் போது தனது மடிகணினியில் வேலை பார்த்து கொண்டு செல்கிறார்” என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான எல்லைகள் குறைந்து வருவதை காட்டுகிறது. தங்கள் தொழிற் கடமைகளை முடிப்பதற்காக வழக்கத்திற்கு மாறான வழிகளைக் மக்கள் தினமும் கடைபிடிக்கின்றனர். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்காக இது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டியுள்ளது என சமூக வலைதளங்களில் இந்த பதிவு பகிரப்பட்டு வருகிறது.