லண்டன் தெருக்களில், இந்தியாவை சேர்ந்த விஷ் என்ற இளைஞர் ‘பெஹ்லா நாஷா’ என்ற பாடலை பாடுவதைக் காட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 1 கோடியே 69 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள பல இடங்களில், குறிப்பாக சுற்றுலா தலங்களில் தெருவில் பாடுவது என்பது தற்போது பொதுவான ஒரு நிகழ்வாக மாற்றியுள்ளது. அந்த மாதிரியான நிகழ்வுகளை தற்போது வைரலாக்குவது எனது மிகவும் எளிதானதாக மாறிவிட்டது. காரணம் இன்றைய கால சூழலில் தனி ஒருவரின் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெறுவதற்கு சமூக வலைதளங்கள், ஒரு மிகச்சிறந்த சிறந்த ஊடகமாக மாறி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் தங்கள் திறமைகளை உலகுக்கு முன்வைத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வீடியோவை உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டால், அது வைரலாவதற்கு சில நிமிடங்களே ஆகும்.
அந்த வகையில் சமீபத்திய ஒரு வீடியோவில், இந்தியாவைச் சேர்ந்த விஷ் என்ற தெரு இசைக்கலைஞர் ஒருவர், லண்டனில் பிரபலமான ரெட்ரோ பீட் ‘பெஹ்லா நாஷா’ பாடலைப் பாடுவதைக் காணலாம். அதில் அவரின் அந்த மெல்லிசை மற்றும் மனதை மயக்கி, இதயத்தை தொடும் படியாக பாடும் அவரின் அந்த இசை நிகழ்ச்சியின் வீடியோ பலரின் மனங்களை கவர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான பாடகர் விஷ், இங்கிலாந்தின் தெருக்களில் ஹிட் பாலிவுட் பாடல்களை நிகழ்த்தும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான vish.music என்ற இணையத்தில் ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெஹ்லா நாஷா’ என்ற பாடலைப் பாடியபோது, அவர் நடைபாதையில் அமர்ந்திருப்பதைக் காட்டும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக “லண்டனில் மக்கள் எவ்வளவு சாதாரணமாக உட்கார்ந்து உதித் நாராயணனின் பாடலை ரசிக்கிறார்கள் என்று பாருங்கள் என்ற தலைப்புடன் விஷ் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அவர் இதனை பகிர்ந்ததில் இருந்து 1 கோடியே 69 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. விஷ் பதிவேற்றிய அந்த ரீலில், அவர் மகிழ்ச்சியுடன் பாடுவதையும், வழிப்போக்கர்களாக செல்லும் பார்வையாளர்கள் அனைவரும் தங்களையே மறந்து அங்கு நின்று அந்த பாடலை கேட்பதையும் காணலாம். இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அமர்ந்து ரசிக்கும் அளவுக்கு அந்த வீடியோவில் பாடல் மிக இனிமையாகப் பாடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
1991 ஆம் ஆண்டு உதித் நாராயண் மற்றும் சாதனா சர்கம் குரல்களில் ‘ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்’ படத்தில் வெளிவந்த ‘பெஹ்லா நாஷா’ என்ற பாடல் வெளியாகி பல வருடங்கள் ஆகிறது. இருப்பினும், உலகம் முழுவதிலுமிருந்து பாலிவுட் ரசிகர்களால் இந்த பாடல் இன்றும் ரசிக்கப்படுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா