மதுரை சிறைச்சாலை மாற்றப்படும் இடத்தில் காவல்துறை உயரதிகாரி ஆய்வு

மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலை மாற்றப்பட உள்ள இடையபட்டியில் காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி விசுவநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.   தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக விளங்ககூடிய மதுரை…

மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலை மாற்றப்பட உள்ள இடையபட்டியில் காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி விசுவநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக விளங்ககூடிய மதுரை மத்திய சிறைச்சாலை கடந்த 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 157 ஆண்டுகள் பழமையான இந்த சிறைச்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக போதுமான வசதியின்மை, நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வசதிகளை மேம்படுத்த இடம் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

 

இதனால் மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிக்கு மாற்ற செய்ய சிறை நிர்வாகம் கோரிக்கை வைத்து வந்தது. அதனை ஏற்ற தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட இடைப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மதுரை மத்திய சிறைச் சாலை அமைப்பதற்காக 85 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் சென்னையில் உள்ள புழல் சிறைக்கு இணையாக அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளுடன் சிறைச்சாலை
கட்டப்பட உள்ளது. புதிதாக கட்ட உள்ள சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், பெண்கள் சிறை மற்றும் நூலகங்கள், தொழிற்சாலைகள், பிரமாண்ட சமையல் கூடங்கள், காவலர் குடியிருப்பு, காவலர் அங்காடி, தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பிளாக்குகளுடன் பசுமையான முறையில் மதுரை மத்திய சிறை அமைக்கப்பட உள்ளது.

 

மதுரை இடையபட்டியில் புதிதாக கட்டப்பட உள்ள மத்திய சிறைச்சாலைக்கு அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி விசுவநாதன் மதுரை மத்திய சிறைக்காக புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளிடம் அது குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.