அம்பு எய்வதில் புதிய உலக சாதனை படைத்த 8 வயது சிறுமி!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வளாகத்தில் நடைபெற்ற அம்பு எய்தல் போட்டியில் 8 வயது சிறுமி 8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து புதிய உலக சாதனை படைத்துள்ளாா். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்…

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வளாகத்தில் நடைபெற்ற அம்பு எய்தல் போட்டியில் 8 வயது சிறுமி 8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து புதிய உலக சாதனை படைத்துள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலைகோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வளாகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சென்னை மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 8 வயது  தான்விதா மாலினி,  காற்று நிரப்பட்ட பந்தில் நின்று  8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து உலக இளம் சாதனையாளர்களின் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

மேலும்  உலக இளம் சாதனையாளர்களின் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி தான்விகா மாலினி நாட்டுக்கு சேவை செய்ய வருங்காலத்தில் ஐபிஎஸ் ஆக போவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.