அமைச்சர் மனோதங்கராஜ் சென்ற வாகனம் மீது மோத வந்த சொகுசு காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியில் அமைச்சர்
மனோதங்கராஜ் சென்ற வாகனம் மீது மோத வந்த சொகுசு காரால் சற்று நேரம் பரபரப்பு
ஏற்பட்டது.
நிகழ்ச்சி ஒன்று முடித்து விட்டு கருங்கல் பகுதிக்கும் செல்லும் போது எதிரே வந்த வாகனம் மோதுவது போன்று முன்னே நின்ற நிலையில் உடன் இருந்த பாதுகாப்பு
போலிசார் காரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அந்த காரை இயக்கி வந்த நபர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







