முதுமை காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளை – சோகத்தில் மூழ்கிய கிராமம்!

புதுக்கோட்டை அருகே , முதுமை காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளை அடக்கம் செய்யப்பட்டது . புதுக்கோட்டை மாவட்டம் , மெய் வழி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாலை சக்கரபாணி . இவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்,…

புதுக்கோட்டை அருகே , முதுமை காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு
காளை அடக்கம் செய்யப்பட்டது .

புதுக்கோட்டை மாவட்டம் , மெய் வழி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாலை சக்கரபாணி . இவர் ஜல்லிக்கட்டு ஆர்வலர், இவர் வளர்த்து வந்த 21 வயதான ராமு என்ற ஜல்லிக்கட்டு காளை வயது முதுமை காரணமாக உயிரிழந்தது .

மேலும் , இக்காளை 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை , புதுக்கோட்டை , திருச்சி மற்றம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு , சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது .

நாட்டின காளையான ராமு உயிரிழந்ததைத் தொடர்ந்து , அந்த பகுதி மக்கள் இறந்த காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஜல்லிக்கட்டு காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், மனிதர்களுக்கு செய்வது போல் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.