பூட்டிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து – காவல்துறை தீவிர விசாரணை!

மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் மர்மமான முறையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, கரிமேடு சேர்ந்த அஜித் என்பவர் மருந்து விற்பனையாளராக (…

மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் மர்மமான முறையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை, கரிமேடு சேர்ந்த அஜித் என்பவர் மருந்து விற்பனையாளராக ( மெடிக்கல் ரெப்) பணிபுரிந்துவருகிறார். இவர் தனது மனைவியுடன் வாடகை வீட்டில்  வசித்துவருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு அஜித்தின் வீட்டிற்குள் இருந்து திடிரென வெடி சத்தம்
கேட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின்
அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று
பார்த்தபோது திடீரென மர்ம பொருள் வெடித்து அங்கு வைத்திருந்த பொருட்கள்
வெடித்து சிதறிய நிலையில் கிடந்துள்ளது.


இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில் அஜித்குமார்
மற்றும் அவரது குடும்பத்தினர் 2 நாட்களாக வீட்டில் இல்லை என்பது
தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அஜித்குமார் மற்றும் அவரது
குடும்பத்தினரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சித்தனர். வீட்டிற்குள் வெடித்தது நாட்டு வெடிகுண்டா? வேறு ஏதேனும் வெடிக்கும் பொருளா? என்ற கோணத்தில் கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.


பூட்டியிருந்த வீட்டிற்குள் மர்ம பொருள் வெடித்ததில் சமையலறையில் உள்ள
பொருட்கள் தீப்பற்றிய நிலையில் சேதமடைந்து சிதறி கிடந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.