30.5 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நண்பரின் இறுதிச் சடங்கில் உடல் எரியூட்டப்பட நெருப்பில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட நபர் – அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எங்கே?

நண்பர் இறந்த துக்கத்தில் அவர் உடல் எரியூட்டப்பட நெருப்பில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்லா கங்கர் பகுதியில் வசிக்கும் அசோக் (42) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்குகள் காலை 11 மணியளவில் யமுனைக் கரையில் நடைபெற்றன. அவர் உடல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்பு எரியூட்டப்பட்டது. இந்நிலையில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது நண்பர் ஆனந்த் திடீரென உடல் எரியும் நெருப்பில் குதித்துள்ளார்.

அங்கு நின்றவர்கள் அவரை நெருப்பிலிருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனை செல்லும் வழியில் ஆனந்த் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading