சிற்பக்கலை கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாயின் பரபரப்பு
காட்சி வெளியாகியுள்ளது.
ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே ஸ்ரீ வைஷ்ணவி சிற்பக்கலைக் கூடம் உள்ளது. இந்த சிற்ப கலைக்கூடத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில்
ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள மலையில் இருந்து வெளியேறிய நாகப்பாம்பு
ஒன்று சிற்ப கலைக்கூடத்திற்குள் புகுந்தது. இதனால், அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் கைது
அப்போது, நாகப்பாம்பை பார்த்த சிற்பக்கலை கூடத்தில் வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று அதனை கடித்தது. அப்போது, நாகப்பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முற்பட்டது. இதில், நாகப்பாம்புக்கும், நாய்க்கும் பலத்த சண்டை ஏற்பட்டது. பரபரப்பான இந்த சண்டையில் கடும் கோபத்தில் இருந்த நாய் நாகப்பாம்பை கடித்து குதறியது. நீண்ட நேரம்
நாகப்பாம்பை நாய் கடித்து குதறியதால் நாகப்பாம்பு அங்கேயே சிறிது நேரத்தில்
உயிரிழந்தது.
நாகப்பாம்பு உயிரிழந்த பின்புதான் அந்த நாய் சமாதானமானது. இதனால் சிற்பக்
கலைக்கூடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-ம.பவித்ரா