பிளாக்பூல் உயிரியல் பூங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பறவை உடை அணிந்து கொண்டு ஒரு நபர் பூங்காவிற்குள் சுற்றித்திரிவது போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் லங்காஷிரியில் உள்ள பிளாக்பூல் உயிரியல் பூங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. பொதுவாக உயிரியல் பூங்காக்களில் பாதுகாப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள் போன்ற வேலை வாய்ப்புகளே எதிர்பார்க்கப்படும். ஆனால் பிளாக்பூல் உயிரியல் பூங்கா வெளியிட்ட வீடியோவின் மூலம் தங்கள் பூங்காவின் ஒரு வித்தியாசமான வேலையை பற்றி சொல்லும் விதமாக இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பூங்கா கடலோரத்தில் அமைந்துள்ளதால் அங்கு சீகல் பறவைகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் விலங்குகளின் கூண்டுகளில் இருந்து சீகல் பறவைகள் தொடர்ந்து உணவைத் திருடுவதாக தெரிய வந்தது. இதனால் பூங்காவில் சீகல் பறவைகளை விரட்டும் நடவடிக்கையாக பிளாக்பூல் பூங்கா இந்த விளம்பரத்தை வெளியிட்டது. ஒரு மனிதன் பறவை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பூங்காவிற்குள் வலம் வருவது போன்ற வீடியோவை பிளாக்பூல் பூங்கா வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவை ”நம்மிடையே ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சீகல் பறவைகளை விரட்டுவதற்காக எங்கள் பூங்காவில் இருக்கும் வேலை காலியிடத்தைப் பற்றி பேசாத ஒரு நாடு இந்த பூமியில் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.” என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளது.
எங்கள் பூங்காவின் பார்வையாளர்கள் உணவருந்தும் இடங்களிலிருந்து சீகல்களை விரட்ட எங்களால் முடிந்ததை செய்துள்ளதாக பூங்காவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.