32.4 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்து கொலை; பெண்ணின் தந்தை வெறிச்செயல்!

தேனி அருகே காதல் விவகாரத்தில் 12ம் வகுப்பு மாணவன் கழுத்தை துண்டாக அறுத்து கொலை செய்த பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் கமலேஷ்வரன். இவர் பூதிப்புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தந்தையை இழந்த கமலேஷ்வரனை அவரது அம்மா மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் வளர்த்து வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் கமலேஷ்வரன் சமூக வலைதளங்களில் அதிகம் ஆர்வமுடன் இயங்கி வந்த நிலையில் சமூக வலைதளம் மூலமாக போடேந்திரபுரத்தை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டது. சன்னாசியின் மகள் தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் சன்னாசியின் குடும்பத்தினருக்கு தெரிய
வரவே உடனடியாக சன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் மகன் ஜெயபிரகாஷ்
ஆகியோர் கமலேஷ்வரன் வீட்டிற்கு சென்று கமலேஷ்வரனின் குடும்பத்தினரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறி சன்னாசி குடும்பத்தினர் கமலேஷ்வரனை
கடுமையாக தாக்கியுள்ளனர். மீண்டும் தனது மகளிடம் எவ்வித தொடர்பும் வைத்து
கொள்ள கூடாது என எச்சரித்து உள்ளனர். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து
மீண்டும் கமலெஷ்வரன் சன்னாசியின் மகளிடம் செல்போனில் பேசி காதலை
வளர்த்துள்ளார். இது சன்னாசிக்கு தெரிய வரவே மீண்டும் கமலேஷ்வரனை கடுமையாக
எச்சரித்து உள்ளார்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு கமலேஷ்வரன் சன்னாசியின் மகளை அழைத்து சென்று உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சன்னாசியின் குடும்பத்தினருக்கு கமலேஷ்வரன் மீது கடும் கோபம் ஏற்பட்டது. பலமுறை எச்சரிக்கை செய்தும் அதனை கேட்காமல் மீண்டும் மீண்டும் தனது மகளுன பழகிவந்ததால் ஆத்திரமடைந்த சன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் மகன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கமலேஷ்வரனை கொலை செய்ய முடிவு செய்து வீருசின்னமாள்புரத்திற்கு அடிக்கடி சன்னாசி சென்று கமலேஷ்வரனின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கமலேஷ்வரன் வீட்டை விட்டு விவசாய தோட்டத்திற்குச் செல்வதை அறிந்த சன்னாசி அவரின் பின்னால் சென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக கமலேஷ்வரனை குத்தி விட்டு, அவரின் கழுத்தை முற்றிலுமாக துண்டித்து தலையை தனியாக எடுத்து அவரை கொலை செய்து விட்டு சன்னாசி தலைமறைவாகி விட்டார்.

வீட்டைவிட்டு வெளியே சென்று வெகு நேரம் ஆனாதால் பயந்து போன கமலேஷ்வரனின்
குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது ஊருக்கு ஒதுக்குப்புறமான
தோட்டத்தில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கமலேஷ்வரன் பினமாக கிடந்தது
தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் ஆய்வாளர் ராஜேஷ்
தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய நிலையில் சன்னாசி
குடும்பத்தினருக்கும் கமலேஷ்வரனுக்கும் இடையே ஏற்பட தகராறு குறித்த தகவல்
கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரனை நடத்தியதில் இந்த கொலையை செய்தது சன்னாசி குடும்பத்தினர் தான் என தெரிய வந்ததையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் சன்னாசி தான் இந்த கொலையைச் செய்தார் என்றும், கொலைக்கு உடந்தையாகச் சன்னாசியின் மனைவி தமிழ்செல்வி மற்றும் மகன் ஜெயப்பிரகாஷ் இருப்பதும் தெரியவந்தது. பலமுறை தனது மகளிடம் தொடர்பு கொள்ள கூடாது என கூறியும் அதனையும் மீறி அடிக்கடி செல்போனில் பேசியும், தனது மகளை கோவில் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்ததினால் ஆத்திரமடைந்து
இந்த கொலையைச் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. காதல் விவகாரத்தில் 12 வகுப்பு மாணவனைக் காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading