31.4 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரே நாளில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த 9 காதல் ஜோடிகள்

ஈரோடு மாவட்டம் பவானி காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 9 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சுப முகூர்த்த தினமான நேற்று பல்வேறு இடங்களில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 9 காதல் ஜோடிகள் தங்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் முகூர்த்தம் தினமான நேற்று வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து விட்டு பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பவானி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து மகளிர் போலீசார் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 9 காதல் ஜோடிகளில் ஒருவரின் பெற்றோர் மட்டுமே திருமணத்தை ஏற்று கொண்ட நிலையில் மீதமுள்ள 8 ஜோடிகளில் பெண்களை மணமகன் வீட்டாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். ஓரே நாளில் 9 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று அந்தியூர் காவல்நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading