800ஆண்டுகள் பழைமையான களக்காடு சோமநாதசுவாமி கோயில் பிரதோச விழா -1008 தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு!

களக்காடு அருகே தேவநல்லூர் சோமநாதசுவாமி கோயிலில் மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் 1008 தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். நெல்லை, களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில், பச்சையாற்றின் கரையில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோமதி…

களக்காடு அருகே தேவநல்லூர் சோமநாதசுவாமி கோயிலில் மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் 1008 தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

நெல்லை, களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரில், பச்சையாற்றின் கரையில்
800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோமதி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. பச்சையாற்றின் கரையில் உள்ள பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாக
திகழும் இந்த கோயிலில் ராமபிரான் தரிசனம் செய்துள்ளதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.


பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் ஆனி மாத சனி பிரதோஷ விழா நடைபெற்றது.
இதையொட்டி சோமநாதசுவாமி, கோமதி அம்பாள், நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுகு
சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. விரைவில் இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற
வேண்டி நந்தியம் பெருமானுக்கு 1008 செவ்விளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டது.


அதன்பின் விஷேச அலங்கார தீபாராதனைகள் இடம்பெற்றது. சுவாமி, அம்பாளுக்கு
செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களால் சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டிருந்தது. சுவாமி, அம்பாள், நந்தி பகவானுக்கு 3 அர்ச்சகர்களை
கொண்டு ஒரே நேரத்தில் அபிஷேக, தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

இவைகண் கொள்ளா காட்சியாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, 1008 தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. கோயில் சன்னதிகள், பிரகாரங்கள், மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளில் பக்தர்கள் தீபம் ஏற்றினர்.  தீப ஒளியில் கோயில் சன்னதிகள், மண்டபங்கள்  ஜொலித்தன. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.