33.5 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்கேன் எடுக்கச் சென்ற 8 மாத கர்ப்பிணி உயிரிழந்த பரிதாபம்!

சென்னை திருமுல்லைவாயல் சோழம்பேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க சென்ற 8 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மனைவி வைஷாலி. 8 மாத கர்ப்பிணியான இவர், திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் போது திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயக்கமடைந்த அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், மருத்துவமனையின் முறையற்ற சிகிச்சையால்தான் தனது மனைவி உயிரிழந்ததாக கூறி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் இதுகுறித்து திருவள்ளூர் ஆர்டிஓ ப்ரீத்தி பார்கவி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இளம் கர்ப்பிணி பெண்னுடன் சேர்ந்து கருவில் வளர்ந்த சிசுவும் உயிரிழந்தது பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading