அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது, ஆதரவாளர்களை மேலும் வன்முறைக்கு தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்டதாக, ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.
அதேபோல், 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், அமெரிக்காவில் வன்முறையை தூண்டும் விதமான கருத்துகளை பகிர்ந்ததால், நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.







