முக்கியச் செய்திகள்ஹெல்த்செய்திகள்

மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் 7 உணவுகள்!

மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள் குறித்து இங்கு காணலாம். 

ஹார்டுவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் மனநல மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் உமா நாயுடு மூளையை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் 7 உணவுகளை குறித்து கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

20 ஆண்டுகளுக்கும் மேலாக மூளைக்கான உணவுகள் குறித்து ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.  குறைவான செலவில் மூளையின் திறனை அதிகரிக்க கீரை வகைகள், மூலிகைகள் போன்ற எளிய உணவுகளை உட்கொண்டாலே போதும் என உமா நாயுடு கூறியுள்ளார்.  மூளையின் திறனை அதிகரிக்க உதவும் உணவுகள் என அவர் கூறியுள்ளதாவது;

தயிர் மற்றும் பாலாடைக்கட்டி

தயிர் மற்றும் பாலாடைக்கட்டி நன்மைபயக்கும் பாக்டீரியாக்களை கொண்ட புரோபயோடிக் உணவுகளாகும்.  இவை நமது செரிமான அமைப்பிற்கும், குடலுக்கும் நன்மை பயக்கின்றன.

நட்ஸ் மற்றும் பெர்ரி

செரிமான அமைப்பை அரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான நார்ச்சத்தை இவை வழங்குகின்றன. பெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், உடல் மற்றும் மூளையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கின்றன.

கீரைகள்

கீரைகளில் ஃபோலேட் அல்லது வைட்டமின் பி9 அதிகம் உள்ளது.  இது அறிவாற்றல் குறைவை தாமதப்படுத்த உதவும்.  இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் மூளை ஆரோக்கியமானதாக இருக்கும்.

டார்க் சாக்லேட்

உயர்தர டார்க் சாக்லேட்டில் (70% கோகோ அல்லது அதற்கு மேல்) நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. டார்க் சாக்லேட் உட்கொள்வதால் மூளை செயல் திறன், ஞாபக சக்தி, ஆற்றல் ஆகியவை அதிகரிக்கறது.

மூலிகை செடிகள்

துளசி,  கொத்தமல்லி,  புதினா போன்றவை உணவில் சுவையையும்,  உடல்நலத்திற்கு பல நன்மைகளையும் தருகின்றன. இந்த மூலிகை செடிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் தேவையற்ற அழுத்தங்களிலிருந்து மூளையை பாதுகாக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கிருஷ்ணகிரியில் 15கிமீ தூரத்திற்கு புதிய கால்வாய் அமைக்கும் பணி -எம்.பி, எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தனர்

Web Editor

கரூரில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடவடிக்கை: ஆட்சியர் பிரபு சங்கர்

Web Editor

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading