ஈரோடு அருகே லாரியும் – காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்
ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அருகேயுள்ள முத்துகவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவர், தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் பழனிமலைக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அதிகாலையில் பழனியி லிருந்து காரில் ஊருக்குத் திரும்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவகிரி அருகே பாரப்பாளையம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த லாரியுடன் எதிர்பாரவிதமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த படையப்பன், மஞ்சு, தெய்வானை, தேன்மொழி, அருக்கானி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர்.
படுகாயமடைந்த மோகன் குமார், குமரேசன், முத்துசாமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக் காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.