4 வது டி 20 ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!

நியூசிலாந்திற்கு எதிரான நான்காவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதை தொடர்ந்து இரு அணிக்களுக்கும் இடையே 5 போட்டிகளை கொண்ட டி 20 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் முன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3- 0 என்ற் கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி 20 போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அணி விவரம்

இந்தியா : அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (w),சூர்யகுமார் யாதவ் (c),ரிங்கு சிங், ஹார்திக் பாண்ட்யா, சிவம் துபே, ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து : டிம் சீஃபர்ட் (w), டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர் (c),ஜகாரி ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, இஷ் சோதி, ஜேக்கப் டஃபி.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.