தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 445 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மக்கள் பொது இடங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 71 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 81 பேர், கோவையில் 59 பேர் உள்பட 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் புதுக்கோட்டையில் பாதிப்பு இல்லை. மருத்துவமனையில் 359 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 459 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 28 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 945 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் இன்று கொரோனாவால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.








