ஆவடியில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழப்பு..!

சென்னை ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசு வெடித்து நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள விவசாய தெருவில் வீடு ஒன்றில் வைத்து நாட்டு பட்டாசுகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று விற்பனை செய்யும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பட்டாசு வாங்க வந்த யாசின், சுனில்  உள்ளிட்ட  4 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுப்படுத்தினர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.