அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் தொண்டர்களின் பலத்த கரகோஷம் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
தமிழக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்விக்காக மத்திய அரசை வலியுறுத்தல்.
தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்
மாநில அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கு கண்டனம்.
மகளிர் உரிமைத் தொகை வழங்க கட்டுப்பாடுகள் பல விதித்த தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம். இந்தியாவிலேயே தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றிய தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்.
விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்க தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்.
மேகதாது அணை கட்டும், அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்
கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்.
தமிழகத்தில் தொழில் வளத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு சென்ற தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.
நெசவாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.
உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை அரசே எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.
காவிரி குண்டாறு நதிகளின் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்து தீர்மானம்.
கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.
கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.
மணிப்பூர் மாநில அரசையும் மத்திய அரசையும் அங்கு அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தல்
அதிமுக நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என சூளுரைத்து தீர்மானம்
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம்.
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம்.
ஜெயலலிதாவிற்கு சட்ட சபையில் இழைத்த அநீதியை மறைக்கும் மு.க. ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.
மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம்.
இவற்றோடு அதிமுக குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும், அதிமுக தொண்டாகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்தும் நன்றியும் இதயப்பூர்வமான பாராட்டுகளும்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என நல்லாட்சியைத் தந்தவர். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்த பொதுச் செயலாளர்.
அதிமுவிற்கு இரண்டு கோடிகளுக்கு மேல் உறுப்பினர் சேர்க்கைக்காக அதிமுகவின் மாவட்ட / மாநில / பிற மாநில நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டும் நன்றியும்.
இந்திய திருநாட்டிலேயே 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக.
கட்சியிலிருந்து துரோகிகளை களை எடுத்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச் சாமிக்கு பாராட்டு.
2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை.
அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்நாடு முதல்வராக்க சபதம் ஏற்போம் என தீர்மானம்.
நினைத்ததை முடிப்பவன் நான் புரட்சித் தலைவர் பாடினார். அதன்படி நினைத்ததை முடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
என மொத்தம் 32 தீர்மானங்கள் அதிமுக எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.