தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக, 30,580 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,283 ஆக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,00,954 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 6,383 ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 3,912 பேருக்கும்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 841 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 248 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 751 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 40 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.