தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக 30,055 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,221 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,11,270 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 6,241 ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 3,763 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,229 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 1,490 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 1,087 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அண்மைச் செய்தி: தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,737 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 736 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,104 பேருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 923 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,217 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 48 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








