தமிழகத்தல் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மது அருந்துவோர் நேற்று டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர். முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைத்துக் கொள்ள மது அருந்துவோர் கூட்டம் அலைமோதியதால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 63 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. அதற்கு அடுத்தபடியாக மதுரை மண்டலத்தில் 59 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. திருச்சி, சேலம், கோவை மண்டலங்களில் தலா 56 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது.