உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று மதுக்கடைகள் விடுமுறை என்பதால், தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் நேற்றே கடைகளுக்கு சென்று அதிக அளவில் மதுப்புட்டிகளை வாங்கி சென்றனர். சிலர் கார், பைக்குகளில் சென்று பெட்டி பெட்டியாக மதுப்புட்டிகளை வாங்கி குவித்தனர்.
இதனால், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக,
மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கும்,
அடுத்து சென்னை மண்டலத்தில் ரூ. 52.28 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும்,
சேலம் மண்டலத்தில் 48.67 கோடிக்கும்,
கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடிக்கும்
மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வம் தகவல் தெரிவித்துள்ளது.







