இலங்கை சிறையில் 21 இந்திய மீனவர்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளதா? சமீபத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு சிறை பிடித்துள்ளதா? கைது செய்யப்பட்ட மீனவர்கள், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை விவரம் உள்ளதா என மக்களவையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், பாரிவேந்தர் உள்ளிட்டோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், கடந்த 2020-ஆம் ஆண்டு 74 தமிழக மீனவர்களும், 2021-ஆம் ஆண்டில் 159 தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, பின்னர் மத்திய அரசின் நடவடிக்கையால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது, ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் 21 மீனவர்கள் மற்றும் 2 படகுகள் இலங்கை வசம் உள்ளது, அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக செப்டம்பர் 2020-ல் இருநாட்டு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி மீனவர்கள் மீதான தாக்குதல் இவ்விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.
மேலும், ஜனவரி மாதம் மத்திய அரசால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரமாண சிறைபிடிக்கப்பட்டிருந்த 56 மீனவர்கள் இலங்கை அரசால் விடுக்கப்பட்டுள்ளனர். இருநாட்டு மீனவர்கள் பிரச்சனைகளை ஆலோசிக்க 5வது கூட்டு செயற்குழு கூட்டத்தை (Joint Working Group) விரைவில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.