லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக தொடா்ந்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், இந்தப் பேரிடரில் 20,000 போ் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
வடக்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா. உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த 10-ம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கிழக்கு லிபியாவில் 3 நாள் துக்கம்அனுசரிக்கப்படும் என பிரதமர்ஒசாமா ஹமாத் அறிவித்துள்ளார். வாடி டொ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்து, அதிலிருந்த வெள்ள நீா் டொ்ணா நகரையும், அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் மத்தியதரைக் கடலுக்குள் அடித்துச் சென்றதால், ஏற்கெனவே பாதிப்புப் பகுதியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தக் கடலில் இருந்து தொடர்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருவதாக கூறப்படுகிறது.ஏற்கெனவே, அணை உடைப்புக்குப் பிறகு 10,000 போ் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது அதன் எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரித்ததாகவும், மாயமான அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுவினரால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு விவரங்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.
டொ்ணா நகரில் வசித்துவந்த சுமாா் 90,000 பேர், இந்த பேரிடருக்குப் பிறகு 2 நாள்களாக அரசின் உதவியின்றி தனித்து விடப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.