எழுத்தாளர்கள் உதயசங்கர் மற்றும் ராம் தங்கம் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய விருதகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழில் எழுத்தாளர் உதய சங்கர்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று யுவ புரஸ்கார் விருது ராம் தங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்த கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஷ்கர், யுவ புரஷ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழிக்கான “பால சாகித்திய புரஸ்கார் விருது” ஆதனின் பொம்மை நாவலுக்காக உதயசங்கர்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சாகித்ய அகாடமி வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருதை திருக்கார்த்தியல் சிறுகதைக்காக ராம் தங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாகித்ய அகடமி விருதுகளுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் உதய சங்கர் மற்றும் ராம் தங்கம் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிய தொடங்கியுள்ளன.







