திருச்சி அருகே குளத்தில் குளிக்கும் போது 2 மாணவிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெள்ளரை ஊராட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சத்தியா,
வரதராஜன் மகள் தனுஷ்கா இருவரும் தோழிகளாவர். அப்பகுதியிலுள்ள சிங்க குளத்தில் இரண்டு பேரும் உறவினர்களோடு குளித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் இருவரும் மூழ்கியதாகத் தெரிகிறது.
இதனை அருகில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. குளித்து முடித்து வீட்டுக்கு கிளம்பும் போது சத்தியா, தனுஷ்கா இருவரையும் காணவில்லை. அப்போது மாணவிகள் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியது தெரியவந்தது.
இதனையடுத்து உறவினர்கள் அக்கம் பக்கம் உள்ள மக்களோடு குளத்தில் தேடியபோது
இரண்டு மாணவிகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த குழந்தைகளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இரண்டு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.








