தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரி திருடிய வழக்கில் செங்கல்பட்டு சிறுவர் சீர்தீருத்த பள்ளியில் சேர்த்து வைக்கப்பட்ட வாலிபர் வார்டன்களால் அடித்து கொல்லப்பட்டது விசாரனையில் தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருக்கு திருமணமாகி நிர்மலா என்கிற மனைவியும் 3-மகன்களும், 3-மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான கோகுல்ஸ்ரீ (17). என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரியை திருடியதாக ரயில்வே போலீசார் அவரை கைது செய்து கடந்த 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தாம்பரம் ரயில்வே போலீசாரால் ஒப்படைக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி திடீரென கோகுலுக்கு வலிப்பு மற்றும் வாந்திபேதி ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோகுல்ஶ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் கோகுலின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாய் நிர்மலா குற்றச்சாட்டை முன்வைத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த கோகுலின் உடலை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா பார்வையிட்டு வீடியோ பதிவுடன் கூடிய உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு கோகுலின் உடலை தாய் நிர்மலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனது மகனின் உடலை தாம்பரம் கொண்டு சென்று அடக்கம் செய்ய என்னிடம் பணமும் எனக்கு அந்தளவிற்கு உறவினர்களும் இல்லை என கூறியதால் அவரது உடலை செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி மயானத்தில் தாய் நிர்மலா அவரது இளைய மகன் மற்றும் மகள் முன்னிலையில் உடலை தகனம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா, சீர்திருத்த பள்ளியை சேர்ந்தவர்கள் அடித்ததால் என் மகன் உயிரழந்தான். அவனது ஒரு பல் உடைந்துள்ளது. கை கால் பகுதிகளில் அடித்ததற்கான தழும்புகள் உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சீர்திருத்த பள்ளியை சேர்ந்த ஒரு பெண் என்னை ஒரு இடத்தில் கடத்தி வைத்து உன்னுடைய ஒரு மகன் போய் சேர்ந்துவிட்டான். மீதி உள்ள 5 பிள்ளைகளை காப்பாற்ற வழியை பார்த்து கொள். யார் எதை கேட்டாலும் வாய் திறக்கக்கூடாது. மீறி ஏதாவது பேசினால் உனது மற்ற பிள்ளைகளை ஹோமில் இருந்து வெளியேற்றி விடுவோம் அனைவரும் நடுத்தெருவில் நின்று பிச்சைதான் எடுக்க வேண்டும் என என்னை மிரட்டிய அந்த பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து என் மகனின் சாவுக்கு நீதி வேண்டும். அந்த பெண்ணின் பெயர் தெரியவில்லை. ஆனால் என்னை அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து சென்றால் அந்த பெண்ணை அடையாளம் காட்ட முடியும். எனக்கு பணமேதும் தேவையில்லை என் மகன் சாவிற்கான நீதி கிடைத்தால் போதும் என தனது குமுறலை ஆவேசமாக நிர்மலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர் விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்ற) நீதிபதி ரீனா மேற்கொண்ட விசாரணையில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் மோகன், பணியில் இருந்த காவலர்கள் சந்திரபாபு, வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட் ராஜ், விஜயகுமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்களிடம் கேட்ட பொழுது தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரி திருட்டு வழக்கில் செங்கல்பட்டு சீர்திருத்த அடைக்கப்பட்டிருந்த கோகுல் ஸ்ரீ என்பவர் ஏற்கனவே சில திருட்டு வழக்குகளில் செங்கல்பட்டு சீரான நேரத்தில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோகுல் ஸ்ரீ-யை பார்த்தது ஏற்கனவே நீ திருட்டு வழக்கில் சேர்க்கப்பட்டவர் தானே என்று கேட்டதற்கு கோகுல் ஸ்ரீ முன்னுக்குப் பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.
அதில் ஆத்திரம் அடைந்த செங்கல்பட்டு சிறார் பள்ளியில் பணியாற்றி வந்த அந்த ஆறு பேர் கோகுல் ஸ்ரீயை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆறு பேரும் மாறி மாறி கோகுலை லத்தியால் கால்களில் கைகள் உள்ளிட்ட பல இடங்களில் சரமரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் கோகுல் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து போய் உள்ளார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் கொலை வழக்கை கோகுல் வலிப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக பொய்யான வழக்காக மாற்றப்பட்ட நிலையில் கோகுல் தாயார் நிர்மலா தனி நபராக போரிட்டு தனது மகனின் உயிரிழப்புக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர் முயற்சியால் தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.