போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 5ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.
குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை செயலாளர் கே.கோபால், நிதித் துறை இணை செயளாளர் அருண்சுந்தர் தயாளன், 8 போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடிப்படை ஊதியம் 31.8.2019 அன்று முதல் இரண்டு சதவீதம் ஊதிய உயர்வு என கணக்கீடு செய்யப்பட்டு 1.1.2022 முதல் 3 சதவீதம் ஊதிய உயர்வு என அளித்து புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் என அறிவிப்பு செய்யப்பட்டது. மகளிர் இலவச பயணத் திட்டத்தில் ஓட்டுநர், நடத்துநருக்கு பேட்டா நடமுறைக்கு வந்தது. கொரோனா காலத்தில் பணியில் இருந்தபோது நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் என்கிற கோரிக்கை ஏற்கப்பட்டது. அதேபோல் ஒருமுறை பணி உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 1078 தொழில்நுட்ப மேற்பார்வையாளர் பணிகள் வழங்கப்படும்.
அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் ஒரே வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த நிபுணர் குழு அமைக்கவும், இரவு பணிப்படி, இரவு தங்கல்படி போன்றவற்றை கூடுதலாக வழங்க விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம்.
மலைப் பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான படியை 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்த ஒப்புக் கொண்டுள்ளோம். அதிமுக ஆட்சியில் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஏற்பட்ட விடுப்பை பணி நாளாகக் கருதி இழப்பு ஈடுகட்டப்படும். இதுதவிர்த்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். ஊழியர் சங்கங்கள் பே மேட்ரிக்ஸ் முறையில் ஊதியம் கோருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசு ஊழியர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் உள்ள ஊதிய வித்தியாசத்தை கணக்கிட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்,
தொடர்ந்து, தொமுச, சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 13 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில்
தொ.மு.ச. பேரவை செயலாளரும், திமுக மாநிலங்கலவை உறுப்பினருமான சண்முகம் அளித்த பேட்டியில், ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம். அதன்படி பல்வேறு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திய நிலையில் மேலும் சில கோரிக்கைகளை இன்றும் முன்வைத்துள்ளோம். ஏற்கனவே 10 ஆண்டுகளாக இழந்த கோரிக்கைகளைப் பெறுவதில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொள்கை முடிவில் உள்ளோம். அதற்காக பேசி வருகிறோம். வேலைநிறுத்தம் தற்போது தேவைப்படவில்லை. தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தங்களின் நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம் என்றார்.
-ம.பவித்ரா