31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : விருதுநகர் மாவட்டம் முதலிடம்..!! – முழு விபரம்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் முதலிடம் அதன்  முழு விபரங்களை குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.

 

கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வரை நடைபெற்ற தேர்வு தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இந்த தேர்வின் முடிவுகளை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். இன்று  காலை 9:30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை  வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டார்.

தேர்வெழுதிய 8,03,385  மாணவர்களில்  7,55,451 (94.03%) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவற்றில்  மாணவியர் 4,05,753 (96.38%) பேரும் மாணவர்கள் 3,49,697(91.45%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்களில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதிய நிலையில் அவர் தேர்ச்சி
பெற்றுள்ளார்.  இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் கூடுதலாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்,
Image
மொத்தம் உள்ள மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7533 ஆகும். அவற்றில்
100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2767. அதோபோல
100% தேர்ச்சிப் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை  326.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாட்டிலேயே 97 புள்ளி 85 விகிதத்துடன் விருதுநகர்  மாவட்டம் முதலிடத்திலும் அதேபோல 87 புள்ளி 30 தேர்ச்சி விகிதத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளன.

Image
97 புள்ளி 79 விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம்  இரண்டாம் இடத்தையும் , 97 புள்ளி 59 தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும், 97 புள்ளி 57 தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம் நான்காம்  இடத்தையும் பிடித்துள்ளன.

சிவகங்கை மாவட்டம் 97 புள்ளி 26 தேர்ச்சி விகிதத்துடன் ஐந்தாம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97 புள்ளி 05 தேர்ச்சி விகிதத்துடன் ஆறாம் இடத்திலும் உள்ளன. அதேபோல ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி ஆகியவை குறைவான தேர்ச்சி விகிதங்களுடன் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.

Imageகடந்த வருடம் நடைபெற்ற தேர்வில்  ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை  23,957. இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 32,501.

Imageதேர்வெழுதிய மொத்த மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 4398. இவற்றில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 3923 (89.20%). அதேபோல தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 90 ஆகும். அவற்றில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 79 (87.78%) ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading