முக்கியச் செய்திகள் இந்தியா

பி.எம்.கிசான் திட்டத்தின் 11-வது தவணை விடுவிப்பு

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 11-வது தவணையாக ரூ.2,000 விடுவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலன் பெற பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும் தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளில், ஆண்டுக்கு ரூ.6,000 மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களும் இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடு முழுவதும் இருக்கும் நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பிரதமர் கிசான் திட்டத்தை அறிமுகம் செய்து அதனை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பி.எம் கிசான் திட்டத்தின் 11-வது தவணை தொகை நேற்று  இரவு விடுவிக்கப்பட்டு, நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 14 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை வங்கி கணக்கில் ரூ.2000 வந்து சேர்வதில் சிக்கல் இருந்தால் புகாராக தெரிவிக்க அல்லது உரிய விளக்கத்தை பெற பிரதம மந்திரி கிசான் கட்டணமில்லா தொலைபேசி எண் 18001155266 -ஐ தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram