வெளியானது எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு! 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி!

பத்தாம்  வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம்…

பத்தாம்  வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10-ம் வகுப்பு முடிவுகள் வெளியானது.

இந்த தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.inwww.dge.tn.gov.in அறிவிக்கப்பட்டுள்ள
இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.