10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தேர்ச்சி விகிதத்தில் கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017 , மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in & www.dge.tn.gov.in என்கிற
இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 8,35,614 (91.39%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகள் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் :
– இராணிப்பேட்டை (83.54% )
– நாகப்பட்டிணம் ( 84.41 % )
-கிருஷ்ணகிரி ( 85.36 % )
-மயிலாடுதுறை ( 86.31 %)
-செங்கல்பட்டு ( 88.27 % )







