நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டத்திலிருந்து கடந்த 14 ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள்; I.N.D.I.A. கூட்டணியிலிருந்து நிதீஷ்குமார் விலகிய நிலையில் பீகாருக்குள் நுழைந்த ராகுல்காந்தி நடைபயணம்!
அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் திரிகோணமலையில் வைத்து, படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்திருந்தனர். மேலும், மீனவர்கள் பயன்படுத்திய படகையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, யாழ்ப்பாணம் மீனவ துறையினரின் கோரிக்கைக்கிணங்க நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மீனவர்கள் பயன்படுத்திய படகை நாட்டுடைமையாக்கவும் உரிமையாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.