28.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

‘முதல் முதலாக ஒலியின் வேகத்தை கடந்த மனிதர்’ சக் யேகர் காலமானார்!

முதல் முதலாக ஒலியின் வேகத்தை கடந்த மனிதர் என்ற சாதனையைச் செய்த அமெரிக்க விமானி சக் யேகர் காலமானார்; அவருக்கு வயது 97.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவி 1923 பிப்ரவரி 13 அன்று பிறந்தவர் சார்லஸ் எல்வுட் சக் யேகர். தனது 18 வயது வரை விமானங்களையே பார்திராத சக் யேகர் பின்னாளில் விமானபொறியாளரானார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இவரின் அசாத்திய பொறியியல் ஞானத்தால் 21 வயதிலேயே விமானியாக பதவி உயர்வு பெற்று பல விமானங்களை சுட்டு வீழ்த்தி அமெரிக்க விமானப்படையின் கொண்டாடப்பட்ட விமானியானார்.

1947 அக்டோபர் 14 அன்று ஒலியின் வேகத்தை விட வேகமான போர் விமானத்தில் பறந்து ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சாதனையை சக் யேகர் படைத்தார். சக் யேகரின் இச்சாதனை அமெரிக்க விண்வெளி திட்டத்திற்கு வழி வகுக்க உதவியது

1983ல் வெளிவந்த ‘The Right Stuff’ என்ற திரைப்படம் சக் யேகரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

பல்வேறு பெருமைகளுடன் தனது ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்து வந்த விமானி சக் யேகருக்கு வயது 97. இந்நிலையில் ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சாதனயை படைத்த சக் யேகர் இன்று காலமானதாக அவரின் மனைவி அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading