பாலாற்று பகுதியில் குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட 3 சிறுமிகளில் 2 சிறுமிகளின் உடல் கரை ஒதுங்கியது.
காஞ்சிபுரம் தும்பவணம் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா ,சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய 3 சிறுமிகள் உறவினர் தாமோதரன் என்பவருடன் பாலாற்றில் குளிக்க சென்றனர். அப்போது 3 பேரும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் 2 சிறுமிகளின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் ஒரு சிறுமியின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்ட வந்த நிலையில், மூன்றாவது சிறுமி சுபஸ்ரீ தற்போது பிணமாக மீட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.