பெற்றோர்களின் அலட்சியம்: 3 சிறுமிகள் உயிரிழந்த சோகம்

பாலாற்று பகுதியில் குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட 3 சிறுமிகளில் 2 சிறுமிகளின் உடல் கரை ஒதுங்கியது. காஞ்சிபுரம் தும்பவணம் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா ,சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய 3 சிறுமிகள் உறவினர்…

பாலாற்று பகுதியில் குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட 3 சிறுமிகளில் 2 சிறுமிகளின் உடல் கரை ஒதுங்கியது.

காஞ்சிபுரம் தும்பவணம் பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா ,சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய 3 சிறுமிகள் உறவினர் தாமோதரன் என்பவருடன் பாலாற்றில் குளிக்க சென்றனர். அப்போது 3 பேரும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் 2 சிறுமிகளின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் ஒரு சிறுமியின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்ட வந்த நிலையில், மூன்றாவது சிறுமி சுபஸ்ரீ தற்போது பிணமாக மீட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply