பாமகவின் 2ஆம் கட்ட போராட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கி கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 4வது நாளாக பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, முதல் கட்டமாக சென்னையில் போராட்டம் நிறைவுப்பெற்றுள்ளதாகவும், இரண்டாம் கட்ட போராட்டமாக வரும் 14ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் என தெரிவித்தார்.
மூன்றாம் கட்டமாக ஒவ்வொரு பேரூராட்சிகளிலும், நான்காம் கட்டமாக ஒவ்வொரு நகராட்சியிலும், ஐந்தாம் கட்டமாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அடித்தட்டு மக்களை மேம்படுத்துவதற்கான திட்டம் சமூகநீதி என்றும், அதில் ஒரு அங்கமாக இட ஒதுக்கீடு உள்ளது எனவும் ஜி.கே.மணி பேசினார்.