நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து; ஜப்பான் அரசு அறிவிப்பு!

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் வகையிலான சட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்நாட்டில் கடந்த…

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் வகையிலான சட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்நாட்டில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்நாட்டி கொரோனா வைரஸ் தொற்றால் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான பணிகளையும் தீவிரப்பட்டுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியை கண்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கு இலவசமாக தடுப்பு மருந்துகள் வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய சட்டத்தின் படி ஜப்பானில் உள்ள 126 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஆகும் செலவை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரிலிருந்து 60 மில்லியன் மக்களுக்கும், மேலும் 25 மில்லியன் மக்களுக்கு பயோடெக் நிறுவனமான மாடர்னாவிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை ஜப்பான் பெற்றுள்ளது. மேலும் 120 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்தை பெறவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply