திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது என்றும், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்கு முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 17ம் தேதி மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார். மேலும், 18ம் தேதி மாலை 5 மணியில் இருந்து கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை தொடங்குவதாகவும் வைகோ தெரிவித்தார்.
மேலும் திமுக கூட்டணிக்கு 234 தொகுதியில் வெற்றி என்பது தான் இலக்கு என்றும் வைகோ கூறினார்.







