மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையோ, மிதமான கனமழையோ பெய்யக்கூடும் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் அவர் கூறினார்.
குமரிக்கடல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும் கேரள, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.