சென்னையில் சோகம்: சாக்கடைக்குள் விழுந்து தாய் மகள் உயிரிழப்பு!

மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முகப்பேரை அடுத்த அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கரோலின் பிரசில்லா. தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து…

மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேரை அடுத்த அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கரோலின் பிரசில்லா. தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து பரி, இவர் நேற்றிரவு தனது மூத்த மகள் ஈவ்லினுடன், இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்கள் மதுரவாயல் அருகே சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்தனர். இதில் தாய் மகள் இருவருமே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply