யாரையோ காப்பாத்துவதற்காக தங்கள் மகனை கைது செய்திருப்பதாக சித்ராவின் கணவரான ஹேம்நாத்தின் தந்தை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இன்று சித்ராவின் கணவரான ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், சித்ராவின் பெற்றோரிடம் தாங்கள் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்று கூறினார். ஹேம்நாத்தை கைது செய்ததை தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறிய ரவிச்சந்திரன், யாரையோ காப்பாற்றுவதற்காக ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.







