36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோடநாடு வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் 2வது குற்றவாளியாக கருதப்படும், வாளையார் மனோஜ் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்த, காவல்துறை மற்றும் அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே, கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது தொடர்பான வழக்கும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனகராஜின் உறவினரான ரமேஷிடம் காவல்துறையினர் ஐந்து நாட்கள் விசாரணை நடத்த நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading