எனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாம்: ஜெ.தீபா

தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாகவும் ஜெ தீபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளை விசாரித்த…

தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாகவும் ஜெ தீபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கியது.அத்துடன், அவர்களின் சொந்த செலவில் அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், உத்தரவிட்டிருந்தது..

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் பாப்பையா, தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகவும்,அதற்கான முன்பணமாக இருவரும் சேர்ந்து 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தை செலுத்துமாறு காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை கடிதத்துக்கு பதில் அளிக்க இருப்பதாக தெரிவித்த நிலையில்,தீபா தரப்பு வழக்கறிஞர்,தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார்பாதுகாப்பை அமர்த்தி கொள்வதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply