“இனிமேல் அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன், நான் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று யூடியூபர் டிடிஎப் வாசன் தெரிவித்தார்.
அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாகவும், மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாகவும் யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அதனை யூடியூபில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர்.
ஒரு கட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி SPEEDO METER இல் வாகனம் செல்லும் வேகத்தை பதிவு செய்து அதனை தனது “twin throttles” யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 14ம் தேதி டிக் டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி.முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்த டிடிஎப் வாசன் கோவை பாலக்காடு சாலையில் 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேலாக வாகனத்தை இயக்கி அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது யூ-டியூப் சேனலில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
நகைச்சுவைக்காகவே ஜிபி முத்து அண்ணாவுடன் நான் இந்த வீடியோவை எடுத்தேன். அவர் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டியதில்லை. நான் 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலே வண்டியை ஓட்டியதால் அந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் நான் வேண்டும் என செய்யவில்லை. வீடியோவை பார்க்கும் சாதாரண மக்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வரவேண்டும் என தான் பார்க்கிறார்கள். எனவே ஜிபி முத்து அண்ணாவுடன் காமெடிக்காக தான் நான் அந்த வீடியோவை செய்தேன். ஆனால் அது இவ்வளவு பெரிய விவகாரமாக ஆகும் என்ன நினைக்கவில்லை.
செய்தி சேனல்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான், தெரியாமல் செய்துவிட்டேன். இதற்காக என்னை கைது செய்ய வேண்டும் லைசென்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என சொல்லாதீர்கள். இது என்னை ரொம்ப பாதித்துவிட்டது. இனிமேல் நான் இப்படி வண்டி ஓட்ட மாட்டேன். என்னை கைது செய்து ஜெயிலில் அடைத்து என் வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விடாதீர்கள். நான் செய்தது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று டிடிஎப் வாசன் தெரிவித்தார்.