திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் தலை தாம்பு மலைப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த முகமது நாசிம் என்ற இளைஞர் இரண்டு நாட்களாக சுற்றித் திரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள தலைதாம்பு மலை அடிவாரத்தில் அந்த வாலிபர் தமிழ்நாடு என் பதிவு கொண்ட சோழிங்கநல்லூர் வாகன சோதனை சாவடிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்த ப்ளூ கலர் கொண்ட காரை மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு துப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மலையில் ஆராய்ச்சி செய்வதாகக் கூறி அங்கிருந்த பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துச் சென்ற நபர் இரண்டு நாட்களாகியும் காணவில்லை என அப்பகுதி
மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கார் மட்டும் அப்பகுதியில் தனியாக நின்று
கொண்டிருக்கிறது. மலைப் பகுதிக்குச் சென்ற வாலிபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை மலை அடிவாரத்தில் இருந்து எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் பாதையை அடைத்து வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா